செய்திகள்
கோப்புபடம்

பெட்ரோல் பங்க்கில் கொள்ளை முயற்சி: மேலும் 2 பேர் கைது

Published On 2020-10-12 14:35 GMT   |   Update On 2020-10-12 14:35 GMT
பாளையங்கோட்டையில் பெட்ரோல் பங்க்கில் கொள்ளை முயற்சி வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:

பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் நேற்று முன்தினம் அதிகாலை 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் போட்டனர். திடீரென்று அங்கு பணியில் இருந்த ஊழியர் சுப்பையா மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 2 பேரையும் பணம் கேட்டு மிரட்டினர். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால் அவர்கள் இருவரையும் கத்தியால் குத்திவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். பின்னர் அவர்கள் குலவணிகர்புரம் ரெயில்வே கேட் பகுதியில் வந்த லாரியை வழிமறித்து டிரைவரை மிரட்டி பணம் கேட்டனர். அப்போது அந்த பகுதியில் இருந்த மீன் கடைக்காரர்கள் ஆனந்த் மற்றும் மணி ஆகிய 2 பேரும் கொள்ளையர்களை பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது அவர்களையும் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினர்.

ஆனால் போலீசார் மற்றும் பொதுமக்கள் துரத்தி சென்று ஒருவரை மட்டும் மடக்கி பிடித்தனர். அவர் பேட்டை மயிலாபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கதுரை என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், தப்பி ஓடிய 2 பேரும் நெல்லை டவுனை சேர்ந்த தினேஷ் (வயது 19) மற்றும் தியாகராய நகரை சேர்ந்த 17 வயது வாலிபர் என்பது தெரிய வந்தது. இந்த நிலையில் நேற்று தினேஷ் மற்றும் 17 வயது வாலிபர் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News