செய்திகள்
திருப்பூரில் தையல் தொழிலாளி தற்கொலை
திருப்பூரில் தையல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் ராமையா காலனி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 43). இவர் தையல் தொழிலாளி. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஈஸ்வரன் வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் மனமுடைந்த அவர் அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முன்னதாக அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் நேற்று மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.