செய்திகள்
கோப்பு படம்.

உளுந்தூர்பேட்டை அருகே விவசாயி மர்ம மரணம்

Published On 2020-10-12 07:16 GMT   |   Update On 2020-10-12 07:16 GMT
உளுந்தூர்பேட்டை அருகே வயலுக்கு சென்ற விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உளுந்தூர்பேட்டை:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கரும்பன் மகன் வலக்காரன்(வயது 45). இவர் அதே பகுதியை சேர்ந்த ரோஜாவதி என்பவருக்கு சொந்தமான வயலை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வயலுக்கு சென்ற வலக்காரன் அங்கு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 

இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு வந்த வலக்காரனின் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும் கூறினார்கள். இதை அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த எடைக்கல் போலீசார் வலக்காரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் அவரை யாரேனும் கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News