செய்திகள்
சுருளிப்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
சுருளிப்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தேனி:
கூடலூர் அருகே உள்ள வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் ஆங்கூர்பாளையம், குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன் பட்டி, லோயர்கேம்ப், மேல் மணலாறு, கீழ்மணலாறு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளுக்கு நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இத்தகவலை சின்னமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் ரமேசுகுமார் தெரிவித்துள்ளார்.