செய்திகள்
தற்கொலை

தேனி அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2020-10-11 14:19 GMT   |   Update On 2020-10-11 14:19 GMT
தேனி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:

தேனி அருகே உள்ள பத்ரகாளிபுரத்தை சேர்ந்தவர் ராமு (வயது 55). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி (50). ராமுவுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் சண்டை போட்டார். இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி ஏற்பட்ட குடும்ப தகராறில் மனம் உடைந்த ராமு விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News