செய்திகள்
முககவசம் அணியாத 10 பேர் மீது வழக்கு
வெள்ளகோவிலில் முககவசம் அணியாத 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் பகுதியில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகி கொண்டே வருகிறது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளகோவில் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக முககவசம் அணியாமல் வந்த 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.