செய்திகள்
கோப்பு படம்.

உடன்குடியில் வாலிபருக்கு கத்திக்குத்து

Published On 2020-10-04 13:24 GMT   |   Update On 2020-10-04 13:24 GMT
குடும்ப தகராறில் மகனை கத்தியால் குத்திய தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
உடன்குடி:

உடன்குடி வில்லி குடியிருப்பைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 51). இவர் சைக்கிள் கடை வைத்துள்ளார். இவரது மகன் அந்தோணி டேவிட் (25). குடும்ப பிரச்சினை காரணமாக பாஸ்கர் தனியாக வசித்து வருகிறார். 

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவில் சைக்கிள் கடையில் வைத்து குடும்ப பிரச்சினை காரணமாக பாஸ்கர், அந்தோணி டேவிட்டுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. 2 பேரும் மாறி, மாறி தாக்கிக் கொண்டனர். அப்போது பாஸ்கர், அந்தோணி டேவிட்டை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி வழக்குப்பதிவு பாஸ்கரை வலைவீசி தேடி வருகிறார்.
Tags:    

Similar News