செய்திகள்
மோட்டார் வாகன கடனை கட்ட முடியாததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
சேலத்தில் மோட்டார் வாகன கடனை கட்ட முடியாததால் மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்:
சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 23). இவர் மோட்டார் சைக்கிள் ஒன்றை மாத தவணையில் வாங்கினார். ஆனால் இந்த கடனை அவர் சரியாக கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சரவணன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சரவணன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அழகாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.