செய்திகள்
பழனி அருகே பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (34). இவர் பழனி அருகே உள்ள வயலூரில் தங்கி, பெயிண்டர் வேலை செய்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக சுரேசின் மனைவி, அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் கடந்த சில தினங்களாகவே அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்தநிலையில் சுரேஷ் நேற்று, தான் தங்கியிருந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பழனி சாமிநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.