செய்திகள்
கோப்புபடம்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதி மீது வழக்கு

Published On 2020-10-03 10:03 GMT   |   Update On 2020-10-03 10:03 GMT
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

கெங்கவல்லி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 58). அவரது மனைவி மல்லிகா (55). கணவன், மனைவி இருவரும் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். அப்போது அவர்கள் குடும்ப தகராறு காரணமாக கெங்கவல்லி போலீசில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று சத்தம் போட்டபடி திடீரென்று அவர்கள் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். 

இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கினர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தி சேலம் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். இந்த நிலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக பாண்டியன், மல்லிகா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News