search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் கலெக்டர் அலுவலகம்"

    • வார்டில் பொது குடிநீர் குழாய் அமைப்பது தொடர்பாக பேச செயல் அலுவலரிடம் சென்றால் அவர் என்னிடம் பேச விருப்பம் இல்லை என்று கூறுகிறார்.
    • எனக்கு வாக்களித்த மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை கூட செய்து கொடுக்க மறுக்கிறார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சியில் 6-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் மேகலா. அ.தி.மு.க. வை சேர்ந்த இவர் இன்று காலை தனது 10 வயது மகள் மற்றும் 3 வயது மகனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

    பின்னர் தனது குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே தரையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

    எனது வார்டில் பொது குடிநீர் குழாய் அமைப்பது தொடர்பாக பேச செயல் அலுவலரிடம் சென்றால் அவர் என்னிடம் பேச விருப்பம் இல்லை என்று கூறுகிறார். மேலும் எங்களது கோரிக்கைகளை மாதந்தோறும் மன்ற கூட்டத்தில் மனுக்களாக கொடுத்து வருகிறோம், ஆனால் எதையும் நிறைவேற்றுவதில்லை. எனக்கு வாக்களித்த மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை கூட செய்து கொடுக்க மறுக்கிறார்.

    ஏனென்றால் நான் கீழ் சாதியை சேர்ந்தவர், இதனால் எனது குழந்தைகளை இனி பள்ளிக்கு அனுப்ப மாட்டேன், பேரூராட்சியில் அனைத்து மக்களின் அடிப்படை தேவைகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கூலி வேலைக்கு சென்று பிழைப்பை நடத்த முடியாமல் தள்ளாத வயதில் கடும் சிரமம்பட்டு வருகிறோம்.
    • கணவரிடம் இருந்து சொத்தை மீட்டு, எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா டேனீஸ்பேட்டை பெரியவடகம்பட்டியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 90). இவருடைய மனைவி பொன்னம்மாள் ( 82).

    இவர், தன்னுடைய மகள் கமலா (60) என்பவருடன் கலெக்டர் அலுவலகம் வந்து ஒரு பரபரப்பு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் பழனியப்பனுக்கு 90 வயதாகிறது. எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் உடல் நலக்குறைவால் இறந்து விட்டாார்.

    எனது கணவர் ஏற்கனவே குப்பாயி (70) என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இந்த தொடர்பை கைவிடுமாறு நாங்கள் பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை.

    தற்போது 3-வதாக பழனியம்மாள் (70) என்பவருடன் தொடர்பு வைத்துள்ளார். எங்களுக்கு சொந்தமான பல லட்ச ரூபாய் மதிப்பு உள்ள 6.5 ஏக்கர் நிலத்தை கணவர், ஆசைநாயகி பழனியம்மாளுக்கு எழுதி வைத்துள்ளார்.

    மேலும், நாங்கள் பேரனுடன் வசித்து வந்த வீட்டை இடித்து விட்டு எங்களை மிரட்டுகிறார்.

    கூலி வேலைக்கு சென்று பிழைப்பை நடத்த முடியாமல் இந்த வயதில் கடும் சிரமம்பட்டு வருகிறோம். கணவரிடம் இருந்து சொத்தை மீட்டு, எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் என்னை கருணை கொலை செய்து விடுங்கள்.

    இவ்வாறு அவர் அதில் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த காவல்துறைக்கு கலெக்டர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

    சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு 9 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சேலம்:

    சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியம் தம்மநாயக்கன் பட்டி ஊராட்சி ரைஸ்மில் தெருவில் 7 குடும்பங்கள் உள்ளன. இந்த 7 குடும்பங்களுக்கும் தெரு குழாய் மூலம் பஞ்சாயத்து சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், கடந்த ஒரு மாதகாலமாக தெரு குழாயில் குடி தண்ணீர் வரவில்லை. இதனால் அவதிப்பட்டு வந்த அவர்கள் இது குறித்து ஆபரேட்டர் பழனிசாமியிடம் முறையாக தண்ணீர் திறந்து விடுமாறு கூறினர். இருப்பினும், குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை. 

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணி, அவரது மனைவி ஜீவா, இவர்களது 2 குழந்தைகள் மற்றும் கூலி தொழிலாளி கிருஷ்ணன், அவரது மனைவி கிஷ்ணவேணி, இவர்களது மகன் மற்றும் மூதாட்டி ஆராயி, வசந்தி ஆகியோர் குடிநீர் கேட்டு கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக இன்று மதியம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் கேனில் மண்ணெண்ணை வைத்திருந்தனர். கலெக்டர் அலுவலக பிரதான நுழைவு வாயில் முன்பு நின்று அவர்கள் திடீரென தலையில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

    இதை பார்த்த அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×