செய்திகள்
நாமக்கல்லில் லாரி மெக்கானிக் தற்கொலை
நாமக்கல்லில் லாரி மெக்கானிக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் டவுன் அன்பு நகரை சேர்ந்தவர் கந்தன் (வயது 45). லாரி மெக்கானிக். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று அவர் வீட்டில், மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.