செய்திகள்
மழை

8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Published On 2020-10-03 07:34 GMT   |   Update On 2020-10-03 07:34 GMT
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-

வளிமண்டல சுழற்சி, வெப்ப சலனத்தால் தமிழகத்தில் 8 மாவட்டங்கள், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரியில் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்சமாக ஏற்காட்டில் 9 செ.மீ., மாத்தூரில் 6 செ.மீ., நெய்வேலி, வேப்பூரில் தலா 5 செ.மீ. மழை பதிவானது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News