செய்திகள்
தில்வார் உசேன் லஷ்கார்

திருப்பூரில் பணம் மற்றும் செல்போன்களை திருடிய வடமாநில வாலிபர் கைது

Published On 2020-10-02 12:08 GMT   |   Update On 2020-10-02 12:08 GMT
திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், செல்போன்களை திருடிய வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அனுப்பர்பாளையம்:

திருப்பூர் குமார்நகரை அடுத்த முருங்கபாளையம் விரிவு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 58). இவர் சம்பவத்தன்று மதியம் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். சிறிது நேரம் கழித்து வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த ரூ.8 ஆயிரம் மற்றும் 2 செல்போன்களை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது. 

இதுகுறித்து கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சாமுண்டிபுரம் பகுதியில் 15 வேலம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கந்தர்மணி தலைமையில் போலீசார் ரோந்து சுற்றிவந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த தில்வார் உசேன் லஷ்கார் (21) என்பதும், தற்போது திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் கார்த்திகேயன் வீட்டில் பணம் மற்றும் செல்போன்களை திருடியதும் இவர்தான் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News