search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன்கள் திருட்டு"

    • அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • திருட்டில் ஈடுபட்ட நபர் வடமாநில வாலிபர் போன்று இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் அவினாசி ரோடு காந்திநகர் சந்திப்பில் செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் கடை உள்ளது. அங்கு கோழிக்கோடு, வடகரை பகுதியை சேர்ந்த முகமது இஜாஸ் என்பவர் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார்.

    இரவு அப்துல் சலாம், முகமது இஜாஸ் ஆகியோர் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு சென்றனர். மறுநாள் காலை முகமது இஜாஸ் கடையை திறக்க சென்றபோது கடையின் வெளிப்புறத்தில் பூட்டப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த விலை மதிப்புள்ள புதிய செல்போன்கள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் உரிமையாளர் அப்துல் சலாம் மற்றும் அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். அப்போது அதிகாலை 2.15 மணிக்கு முககவசம் அணிந்தபடி உள்ளே சென்ற மர்ம ஆசாமி ஒருவர் சாக்குப் பையுடன் உள்ளே சென்று புதிய செல்போன்கள் அனைத்தையும் அள்ளிப் போட்டுக் கொண்டு வெளியேறுவதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. திருட்டில் ஈடுபட்ட நபர் வடமாநில வாலிபர் போன்று இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    விலை மதிப்புள்ள செல்போன்களை மட்டும் திருடி இருப்பதால் ஏற்கனவே செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபராக இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். சுமார் ரூ.7 லட்சம் மதிப்புள்ள 55 செல்போன்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் கடையின் பூட்டை உடைத்து 55 செல்போன்களை மர்ம ஆசாமி திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு மற்றும் காவலர்கள் என 20-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • போலீசார் 2 செல்போன்களையும் திருடி சென்ற நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் மேல ரத வீதியில் கீழ் புறத்தில் டவுன் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு மற்றும் காவலர்கள் என 20-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    நேற்று இரவு பணியில் இருந்த போலீசார் நள்ளிரவு போலீஸ் நிலைய அறையில் அமர்ந்து சற்று ஓய்வெடுத்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் போலீஸ் நிலைய பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட செல்போன் திடீரென மாயமானது. அதேபோல் அங்கு பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் செல்போனையும் காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் காணாமல் போன 2 செல்போன்களையும் வேறு அறைகளில் கிடைக்கிறதா என்று தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் செல்போன்கள் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் 2 செல்போன்களையும் மர்ம நபர்கள் யாரேனும் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து தூக்கிச் சென்று இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர். உடனடியாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்து ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து இந்த தகவல் உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் 2 செல்போன்களையும் திருடி சென்ற நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக போலீஸ் நிலையம் மற்றும் ரத வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    முதல் கட்ட விசாரணையில் நேற்று டவுன் ரத வீதியில் வாகன சோதனையில் டவுன் போலீசார் ஈடுபட்டிருந்த போது ஒரு நபர் மது போதையில் வாகனம் ஓட்டி வந்ததாகவும், அந்த வாகன ஓட்டி மீது சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்ததும் தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்து அந்த நபர் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து செல்போனை திருடி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • செல்வராஜ் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு காமிராக்களையும் ஆய்வு செய்தனர்.

    கோவை,

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது29). இவர் கணியூர் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது அறையின் அருகே வடமாநிலத்தவர்கள் 3 பேர் வசித்து வருகிறார்கள். சம்பவத்தன்று காலை இவர் தங்கியிருந்த அறையின் அருகே இருந்த மற்றொரு அறையில் 5 செல்போன்கள் திடீரனெ திருடு போய் இருந்தது.இது தொடர்பாக செல்வராஜ் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிராக்களையும் ஆய்வு செய்தனர். யாராவது அந்த ரூமிற்குள் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்ததா என போலீசார் ஆய்வு செய்தனர்.

    மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட்டில் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி உள்ளது.
    • இந்த கல்லூரியின் எதிரில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் தங்கும் விடுதி உள்ளது. இங்கு 80-க்கும் மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட்டில் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 3000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியின் எதிரில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் தங்கும் விடுதி உள்ளது. இங்கு 80-க்கும் மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

    இதனிடையே பக்ரீத் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை ஒட்டி, பெரும்பாலான மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர். ஒரு சில மாணவர்கள் மட்டுமே விடுதியில் தங்கி இருந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மர்ம நபர் ஒருவர், விடுதியின் மெயின் கேட்டை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது, விடுதியில் தங்கி இருந்த மாணவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

    மெதுவாக உள்ளே நுழைந்த அந்த மர்ம நபர், மாணவர்களின் 3 செல்போன்களை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காலையில் எழுந்த மாணவர்கள், தங்கள் செல்போன்கள் காணாமல் போயிருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து, விடுதியில் இருந்த சி.சி.டி.வி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் மர்மநபர் ஒருவர் விடுதியின் உள்ளே வருவதும், வெளியே செல்வதும் பதிவாகி இருந்தது. இதை வைத்து தங்கள் செல்போன்களை மர்மநபர் திருடிச் சென்றதை மாணவர்கள் அறிந்தனர். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். 

    • இரவில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களிடம் மர்மநபர்கள் 2 பேர் செல்போன் மற்றும் எந்திரங்களை திருடி செல்லும் சி.சி.டி.வி.காட்சிகள் வெளியானது.
    • வழக்குப் பதிவு செய்த சேலையூர் போலீசார் கிழக்கு தாம்பரம் பாரத மாதா தெருவில் சுற்றித்திரிந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    தாம்பரம்:

    சென்னை சேலையூர் போலீஸ் நிலையம் எதிரில் தாம்பரம் மாநகராட்சிக்கு சொந்தமான அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவு சார் மையம் கட்டும் பணியில் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இரவில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களிடம் மர்மநபர்கள் 2 பேர் செல்போன் மற்றும் எந்திரங்களை திருடி செல்லும் சி.சி.டி.வி.காட்சிகள் வெளியானது.

    இது குறித்து வழக்குப் பதிவு செய்த சேலையூர் போலீசார் கிழக்கு தாம்பரம் பாரத மாதா தெருவில் சுற்றித்திரிந்த இருவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் இரும்புலியூர் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (18), லோகேஷ் (19) என்பதும் தொழிலாளர்களிடம் இருந்து செல்போன்களை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • ஊழியர் கைது
    • நிறுவனத்தின் காவலாளி, ஊழியரை பரிசோதனை செய்தார்.

    கோவை

    கோவை செட்டிப்பா ளையத்தை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் பெர்னாண்டஸ் (வயது 32). இவர் ஒரட்டுகுப்பை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.

    இங்கு சேலத்தை சேர்ந்த சங்கர் பரத் (20) என்பவர் ஊழியராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று சங்கர் பரத் வழக்கம் போல வேலைக்கு வந்தார். அங்கு வினியோகம் செய்ய இருந்த பொருட்களை பார்சல் செய்து கொண்டு இருந்தார்.

    பின்னர் அவர் வேலைகளை முடித்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டார். நிறுவனத்தின் காவலாளி சங்கர் பரத்தை பரிசோதனை செய்தார். அப்போது அவர் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான செல்போனை மறைத்து திருடி செல்வது தெரியவந்தது.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளி உடனே மேலாளர் கிறிஸ்டோபர் பெர்னாண்டசிடம் தெரிவித்தார். அவர் அங்கு வந்து சங்கர் பரத்தை கண்டித்து விசாரித்தார். அதில் அவர் ஏற்கனவே ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும் திருடி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து மேலாளர், ஊழியர் சங்கர் பரத்தை பிடித்து செட்டிப்பாளையம் போலீசில் ஒப்படைத்து புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர் பரத் கைது செய்தனர். பின்னர் அவர் திருடிய செல்போனை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    • நேற்று இரவு வழக்கம்போல், செல்போன் கடையில் வியாபாரத்தை முடித்துவிட்டு உரிமையாளர்கள் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர்
    • அங்கிருந்த சுமார் ரூ.50 ஆயிரத்திற்கும் மேலான செல்போன்கள் மற்றும் உதிரி பாகங்களை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

    திருச்சி:

    திருச்சி பாலக்கரை பருப்புக்கார தெருவில் பகுதியில் திருச்சியை சேர்ந்த 3 பேர் ஒன்றாக இணைந்து செல்போன் கடையை நடத்தி வருகின்றனர். இங்கு புதிய செல்போன்கள் மற்றும் அதற்கான உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று இரவு வழக்கம்போல், செல்போன் கடையில் வியாபாரத்தை முடித்துவிட்டு உரிமையாளர்கள் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.

    பின்னர் இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, மர்ம நள்ளிரவில் வந்த மர்ம நபர் செல்போன் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்துள்ளார்.

    பின்னர் அங்கிருந்த சுமார் ரூ.50 ஆயிரத்திற்கும் மேலான செல்போன்கள் மற்றும் உதிரி பாகங்களை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. பின்னர் இது குறித்து அவர்கள் திருச்சி பாலக்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை நடத்தினார்கள்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன் கடையில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இதனால் பாலக்கரை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு காரில் இருந்த 3 செல்போன்கள் மற்றும் பாஸ்போர்ட்டை மர்ம மனிதர்கள் திருடிச் சென்றனர்.

    மதுரை:

    மதுரை பொன்மேனி ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் சென்றாய பெருமாள் (வயது 73). ஒய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு.

    இவர் நேற்று காலை காரில் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று விட்டு மதுரை திரும்பினார். காளவாசல் பைபாஸ் சாலையில் வந்த போது, காரை நிறுத்திவிட்டு டீ குடிக்கச் சென்றார்.

    டீ குடித்து விட்டு காருக்கு திரும்பிய சென்றாய பெருமாள், காரில் இருந்த 2 ஐபோன்கள், ஓரு செல்போன் மற்றும் பாஸ்போர்ட்டு மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அதனை யாரோ திருடிச் சென்றிருப்பது தெரியவர, எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு காரில் கைவரிசை காட்டிய மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.

    ×