search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளர்களிடம் செல்போன்கள் திருட்டு- 2 பேர் கைது
    X

    தொழிலாளர்களிடம் செல்போன்கள் திருட்டு- 2 பேர் கைது

    • இரவில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களிடம் மர்மநபர்கள் 2 பேர் செல்போன் மற்றும் எந்திரங்களை திருடி செல்லும் சி.சி.டி.வி.காட்சிகள் வெளியானது.
    • வழக்குப் பதிவு செய்த சேலையூர் போலீசார் கிழக்கு தாம்பரம் பாரத மாதா தெருவில் சுற்றித்திரிந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    தாம்பரம்:

    சென்னை சேலையூர் போலீஸ் நிலையம் எதிரில் தாம்பரம் மாநகராட்சிக்கு சொந்தமான அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவு சார் மையம் கட்டும் பணியில் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இரவில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களிடம் மர்மநபர்கள் 2 பேர் செல்போன் மற்றும் எந்திரங்களை திருடி செல்லும் சி.சி.டி.வி.காட்சிகள் வெளியானது.

    இது குறித்து வழக்குப் பதிவு செய்த சேலையூர் போலீசார் கிழக்கு தாம்பரம் பாரத மாதா தெருவில் சுற்றித்திரிந்த இருவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் இரும்புலியூர் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (18), லோகேஷ் (19) என்பதும் தொழிலாளர்களிடம் இருந்து செல்போன்களை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×