என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cell phones stolen"

    • செல்போன் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக கூரியர் நிறுவனம் அளித்த புகாரில் வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
    • செல்போன்கள் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட கண்டெய்னரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூரில் ரூ.3 கோடி மதிப்பிலான 5,140 செல்போன்கள் திருடப்பட்ட விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் இருந்து பெங்களூருவுக்கு ஒரு கண்டெய்னரில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.3 கோடி மதிப்புள்ள செல்போன்கள் திருடப்பட்டது.

    செல்போன் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக கூரியர் நிறுவனம் அளித்த புகாரில் வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த வழக்கு தொடர்பாக கண்டெய்னர் டிரைவர் ராகுலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய நிலையில் தற்போது 7 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 56 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் செல்போன்கள் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட கண்டெய்னரையும் பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில்,

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் 300 முதல் 400 மொபைல் போன்களை விற்றுள்ளதாகவும், IMEI எண்ணின் அடிப்படையில் மொபைல் போன்கள் முடக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

    • செல்வராஜ் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு காமிராக்களையும் ஆய்வு செய்தனர்.

    கோவை,

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது29). இவர் கணியூர் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது அறையின் அருகே வடமாநிலத்தவர்கள் 3 பேர் வசித்து வருகிறார்கள். சம்பவத்தன்று காலை இவர் தங்கியிருந்த அறையின் அருகே இருந்த மற்றொரு அறையில் 5 செல்போன்கள் திடீரனெ திருடு போய் இருந்தது.இது தொடர்பாக செல்வராஜ் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிராக்களையும் ஆய்வு செய்தனர். யாராவது அந்த ரூமிற்குள் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்ததா என போலீசார் ஆய்வு செய்தனர்.

    மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×