செய்திகள்
தற்கொலை

பெரம்பலூர் அருகே விவசாயி தற்கொலை

Published On 2020-09-29 07:18 GMT   |   Update On 2020-09-29 07:18 GMT
பெரம்பலூர் அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா புதுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன்(வயது 48). விவசாயியான இவருக்கு தீராத வயிற்றுவலி இருந்து வந்த நிலையில், நேற்று வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை(விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார், பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News