செய்திகள்
திண்டுக்கல் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
திண்டுக்கல் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்தவர் சியோன் ஆரோக்கியசாமி. இவருடைய மகன் சுதன் வினோத்குமார் (வயது 29). இவர் காடை வளர்ப்பு தொழில் செய்து வந்தார். இதற்கிடையே கொரோனா ஊரடங்கு காரணமாக அவரது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த சுதன் வினோத்குமார் நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.