செய்திகள்
கோப்புபடம்

வலங்கைமான் அருகே மின் ஊழியர்களை தாக்க முயன்ற 3 பேர் கைது

Published On 2020-09-27 12:26 GMT   |   Update On 2020-09-27 12:26 GMT
வலங்கைமானில் மின் ஊழியர்களை தாக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வலங்கைமான்:

வலங்கைமான் கள்ளர் தெரு குடமுருட்டி ஆற்றின் வழி நடப்பு பகுதியில் தற்காலிக மின் ஊழியர் ரியாஸ் அகமது என்பவர் சம்பவத்தன்று மின் பாதைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பிரதீப்குமார் (வயது25) என்பவர் அவரை தாக்க முயன்றதாக தெரிகிறது. இதுதொடர்பாக ரியாஸ் அகமது, அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார்.

இந்த நிலையில் பிரதீப்குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் விஜயகுமார் (24), அரவிந்தன் (24) ஆகிய 3 பேரும் சேர்ந்து வலங்கைமான் துணை மின் நிலையத்துக்கு சென்று அங்கு பணியில் இருந்த மின்வாரிய அலுவலர்கள் சுந்தரமூர்த்தி, நமச்சிவாயம் மற்றும் ரியாஸ் அகமது ஆகியோரிடம் தகராறு செய்ததுடன் அவர்களை தாக்க முயன்றதாக தெரிகிறது. இதுகுறித்து மின்வாரிய உதவி பொறியாளர் அகஸ்தியா, வலங்கைமான் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப்குமார், விஜயகுமார், அரவிந்தன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
Tags:    

Similar News