செய்திகள்
விபத்து பலி

காங்கேயம் அருகே மொபட் மீது லாரி மோதல்- முதியவர் பலி

Published On 2020-09-23 13:36 GMT   |   Update On 2020-09-23 13:36 GMT
காங்கேயம் அருகே விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கேயம்:

காங்கேயம் அருகே ஆலாம்பாடி ஊராட்சிக்குட்பட்ட நல்லிக்கவுண்டன் வலசை சேர்ந்தவர் சுப்பராயன் (வயது 80) விவசாயி. இவர் நேற்று மாலை மொபட்டில் நல்லிக்கவுண்டன் வலசில் இருந்து ரேசன் கடைக்கு சென்றார். பின்னர் ரேசன் கடையில் பொருட்கள் வாங்கி விட்டு, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். நல்லிக்கவுண்டன் வலசு பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்கும் போது காங்கேயத்திலிருந்து வந்த லாரி இவர் ஓட்டிச்சென்ற மொபட் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த சுப்பராயனை அக்கம் பக்கத்தினர் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சுப்பராயனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்தவிபத்து குறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News