செய்திகள்
தற்கொலை

வெள்ளகோவில் அருகே லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலை

Published On 2020-09-23 12:33 GMT   |   Update On 2020-09-23 12:33 GMT
வெள்ளகோவில் அருகே லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளகோவில்:

வெள்ளகோவில் அருகே உள்ள திருமங்கலத்தை சேர்ந்த லாரி டிரைவர் நாச்சிமுத்து (வயது 47). கடந்த 9-ந்தேதி இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த நாச்சிமுத்து வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதற்குப் பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நாச்சிமுத்து இறந்துவிட்டார். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News