செய்திகள்
கோப்பு படம்.

செஞ்சி அருகே தீக்குளித்து பெண் தற்கொலை

Published On 2020-09-23 06:33 GMT   |   Update On 2020-09-23 06:33 GMT
செஞ்சி அருகே தீக்குளித்து பெண் உயிரிழந்தார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செஞ்சி:

செஞ்சி அருகே உள்ள திருவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குப்பன் மகன் அன்பழகன். இவரது மனைவி செல்வி(வயது 26). திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் மனைவியிடம் வரதட்சணை கேட்டு அன்பழகன் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 11-ந்தேதியும் உறவினர்களின் தூண்டுதலின் பேரில் செல்வியிடம் அன்பழகன் தகராறு செய்து, அவரை திட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த செல்வி தன் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு அணிலாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சோம சமுத்திரத்தை சேர்ந்த செல்வியின் தாய் ராஜேஸ்வரி செஞ்சி போலீசில் புகார் செய்தார். அதில், தனது மகள் சாவுக்கு அவரது கணவர் மற்றும் உறவினர்கள் தூண்டுகோலாக இருந்ததாக தெரிவித்து இருந்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முகமது அசாருதீன் வழக்குப்பதிவு செய்து, அன்பழகன், அவரது சகோதரர்கள் ஆறுமுகம், மாரிமுத்து, உறவினர்கள் வடமலை, தேசம்மாள் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News