செய்திகள்
கொரோனா பரிசோதனை கோப்புப்படம்

கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 93 பேர் குணமடைந்தனர்

Published On 2020-09-23 02:37 GMT   |   Update On 2020-09-23 02:37 GMT
மதுரையில் நேற்று புதிதாக 61 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையில் நேற்று ஒரே நாளில் 93 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
மதுரை:

மதுரையில் நேற்று புதிதாக 61 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 51 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 24 ஆக உயர்ந்தது. இதற்கிடையில் நேற்று ஒரே நாளில் 93 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 885 ஆக உயர்ந்துள்ளது. இவர்களை தவிர 761 பேர் சிகிச்சையில் உள்ளனர். மதுரையில் நேற்று கொரோனாவால் 52 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தனியார் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். இதன் மூலம் கொரோனாவால் மதுரையில் இது வரை 380 பேர் இறந்துள்ளனர்.
Tags:    

Similar News