செய்திகள்
முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
எடப்பாடியில் முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
எடப்பாடி:
சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தநிலையில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) முருகன் உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர்கள் தங்கவேலு, ஜான் விக்டர், நிரஞ்சன் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் எடப்பாடி பஸ் நிலையம் அருகே கண்காணித்தனர். அப்போது முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு ரூ.200 வீதம் 26 பேருக்கு அபராதம் விதித்து வசூல் செய்தனர்.