செய்திகள்
தற்கொலை

சிவகாசி அருகே முதியவர் தற்கொலை

Published On 2020-09-21 14:24 GMT   |   Update On 2020-09-21 14:24 GMT
சிவகாசி அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:

சிவகாசி அருகே உள்ள நடையனேரியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 80). வயது மூப்பு காரணமாக இவர் உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மனமுடைந்த கோபாலகிருஷ்ணன் வீட்டில் யாரும் இல்லாத போது எலி மருந்தை (விஷம்) குடித்துவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் கோவிந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News