செய்திகள்
இட்டமொழி அருகே கொரோனா பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது.
இட்டமொழி:
இட்டமொழி அருகே உள்ள மன்னார்புரம் இந்திரா நகரில், நாங்குநேரி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் குருநாதன், நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரமநாயகம், குமரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜான் ஜெயச்சந்திரன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, கொரோனா பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது. தெற்கு விஜயநாராயணம் சுகாதார ஆய்வாளர் விவேக், சங்கனாங்குளம் ஊராட்சி செயலர் நம்பி மற்றும் மருத்துவ பணியாளர்கள் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தினர்.