செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

25 துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர்

Published On 2020-09-19 09:06 GMT   |   Update On 2020-09-19 10:55 GMT
தமிழகத்தில் ரூ.353.11 கோடியில் அமைக்கப்பட்ட 25 துணை மின் நிலையங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சென்னை:

தமிழகத்தில் ரூ.353.11 கோடியில் அமைக்கப்பட்ட 25 துணை மின் நிலையங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலியில் திறந்து வைத்தார்.

ஈரோடு, சென்னை, கோவை, கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகையில் துணை மின் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

சேலம், தஞ்சை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி, திருவாரூர், வேலூரிலும் துணை மின் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.


நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வி இயக்கக வளாகத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

பல மாவட்டங்களில் ரூ.9.70 கோடியில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடங்களை முதலமைச்சர் காணொலியில் திறந்து வைத்தார்.

Tags:    

Similar News