செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

பெரியகுளத்தில் அதிகாரி வீட்டில் 20 பவுன் நகை, ரூ.1½ லட்சம் திருட்டு

Published On 2020-09-19 08:01 GMT   |   Update On 2020-09-19 08:01 GMT
பெரியகுளத்தில் அதிகாரி வீட்டில் 20 பவுன் நகை, ரூ.1½ லட்சம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம்:

பெரியகுளம் வடகரை அரண்மனை தெருவை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 70). இவர் சுகாதார துறையில் இணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்தநிலையில் சம்பவத்தன்று கருணாகரன் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டுக்குள் பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகைகள், ரூ.1½ லட்சம் மற்றும் டி.வி. உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

இதற்கிடையே நேற்று காலை கருணாகரன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக இதுகுறித்து கருணாகரனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி வீட்டிற்கு வந்த கருணாகரன், நகைகள் மற்றும் பணம், பொருட்கள் திருடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் இதுகுறித்து அவர் பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News