செய்திகள்
அபராதம்

முககவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

Published On 2020-09-19 06:52 GMT   |   Update On 2020-09-19 06:52 GMT
கடத்தூர் பேரூராட்சி பகுதியில் முககவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கடத்தூர்:

கடத்தூர் பேரூராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற 9 பேருக்கு தலா ரூ.200 வீதம் 1,800 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் முககவசம் அணிவதன் அவசியம் குறித்தும் வாகன ஓட்டிகளிடம் அவர்கள் விளக்கி கூறினர். மேலும் சமூக விலகளை கடைபிடிப்பதின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தனர்.
Tags:    

Similar News