செய்திகள்
திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் முத்து கண்ணன் தலைமை தாங்கினார்.
அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்காக அமைதி வழியில் போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சீதாராம் யெச்சூரி மீதுள்ள வழக்கை திரும்பப் பெறக் கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.