செய்திகள்
கோப்புபடம்

தனியார் ஆஸ்பத்திரி சூறையாடல் - 4 பேர் மீது வழக்கு

Published On 2020-09-17 10:55 GMT   |   Update On 2020-09-17 10:55 GMT
நாகர்கோவில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் பணம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் சூறையாடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் 4 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் சார்லஸ் தெருவை சேர்ந்தவர் ஜெபர்சன் பொன்டேவிட் (வயது 43), டாக்டர். இவர் அந்த பகுதியில் தனியார் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகர்கோவிலை சேர்ந்த டெல்வர், அருண் உள்பட 4 பேர் சேர்ந்து ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து சூறையாடியதாக கூறப்படுகிறது. 

இதில் ஆஸ்பத்திரியில் கண்ணாடி கதவு, கண்காணிப்பு கேமரா, சில மருத்துவ உபகரணங்கள் சேதமடைந்தன. மேலும் ஆஸ்பத்திரியில் இருந்து பணத்தை திருடி சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெபர்சன் பொன்டேவிட் நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் டெல்வர், அருண் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News