செய்திகள்
விபத்து பலி

நாகவேடு அருகே விபத்தில் மின்வாரிய பணியாளர் பலி

Published On 2020-09-15 12:16 GMT   |   Update On 2020-09-15 12:16 GMT
நாகவேடு அருகே விபத்தில் மின்வாரிய பணியாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெமிலி:

அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் தணிகாசலம் (வயது 45). இவர், காட்பாடி தாராபடவேடு மின்வாரிய அலுவலகத்தில் மின் அளவீட்டு பணியாளராக வேலை பார்த்து வந்தார். அவர் நேற்று காலை பணிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

நாகவேடு அருகே காட்டுமரம் பஸ் நிறுத்தம் வளைவில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக எதிரே வேகமாக வந்த அடையாளம் தெரியாத ஒரு கார் திடீரென அவரின் மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. அதில் மோட்டார்சைக்கிளுடன் கீழே விழுந்த தணிகாசலத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் தாலுகா போலீசார் விரைந்து வந்து தணிகாசலத்தின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார் யாருடையது என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News