செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

திருச்சி மாவட்டத்தில் புதிதாக 74 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

Published On 2020-09-14 23:46 GMT   |   Update On 2020-09-14 23:46 GMT
திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 74 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
திருச்சி:

திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 74 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதன்மூலம் திருச்சி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 8,914 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 7,929 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 131 ஆக உள்ளது
Tags:    

Similar News