செய்திகள்
போளூர் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது
போளூர் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர்:
போளூர் பஸ் நிலையத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற போளூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 51) என்பவரை போளூர் சப்-இன்ஸ்பெக்டர் ரேகா கைது செய்தார்.
மேலும் அவரிடம் இருந்து 28 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.300 பறிமுதல் செய்யப்பட்டது.