செய்திகள்
பேரளம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது
பேரளம் அருகே சாராயம் விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்னிலம்:
பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருமீயச்சூர் ராயதோப்பு பகுதியை சேர்ந்த மோகன்(வயது20) என்பதும், சாராயம் விற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், மோகனை கைது செய்து அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் பேரளம் தேரடி தெரு அருகே சாராயம் விற்ற சுதன்(29) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.