செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

சுகாதாரத்துறையினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Published On 2020-09-08 04:31 GMT   |   Update On 2020-09-08 04:31 GMT
மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை:

மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்துள்ள நிலையில் அதற்கேற்ப மருத்துவ வசதிகளை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கிறார்.

ஊரடங்கு தளர்வுகளால் கொரோனா அதிகரித்தால் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ஆலோசனையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.


Tags:    

Similar News