செய்திகள்
வாசுதேவநல்லூர் பகுதியில் நாளை மின்தடை
வாசுதேவநல்லூர் பகுதியில் நாளை பராமப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
வாசுதேவநல்லூர்:
நாராணபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. எனவே அங்கிருந்து மின் வினியோகம் பெறும் தரணி நகர், வாசுதேவநல்லூர், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், உள்ளார், நெல்கட்டும்செவல்,
சுப்பிரமணியபுரம், வெள்ளயானைக்கோட்டை, தாருகாபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது என்று கடையநல்லூர் கோட்ட மின் வினியோக செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.