செய்திகள்
திருப்பூரில் சரக்குரெயில் மோதி 10-ம் வகுப்பு மாணவன் பலி
திருப்பூரில் சரக்குரெயில் மோதிய விபத்தில் 10-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் கொங்கு மெயின்ரோட்டில் உள்ள விக்னேஷ்வரா நகரை சேர்ந்தவர் ஸ்ரீஹரி(வயது15). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று மாணவர் தனது நண்பர் ஒருவருடன் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள கடைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து மாணவனின் பெற்றோர், அக்கம் பக்கம் உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து மகன் கூறி சென்ற ஊத்துக்குளி ரோட்டில் சென்று பார்த்தனர்.
அப்போது அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தில் ஸ்ரீஹரி உடல் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தான். மாணவனின் உடலை பார்த்து அவனது பெற்றோர் கதறி அழுதனர்.
இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். விசாரணையில், ஸ்ரீஹரி தனது நண்பருடன் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரெயில் மோதி ஸ்ரீஹரி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் கொங்கு மெயின்ரோட்டில் உள்ள விக்னேஷ்வரா நகரை சேர்ந்தவர் ஸ்ரீஹரி(வயது15). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று மாணவர் தனது நண்பர் ஒருவருடன் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள கடைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து மாணவனின் பெற்றோர், அக்கம் பக்கம் உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து மகன் கூறி சென்ற ஊத்துக்குளி ரோட்டில் சென்று பார்த்தனர்.
அப்போது அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தில் ஸ்ரீஹரி உடல் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தான். மாணவனின் உடலை பார்த்து அவனது பெற்றோர் கதறி அழுதனர்.
இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். விசாரணையில், ஸ்ரீஹரி தனது நண்பருடன் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரெயில் மோதி ஸ்ரீஹரி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.