செய்திகள்
கைது

சாராயம் விற்ற பெண் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2020-09-05 12:46 GMT   |   Update On 2020-09-05 12:46 GMT
திருவண்ணாமலை அருகே சாராயம் விற்ற பெண் குண்டர் சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த பவுன்குமார் என்பவரது மனைவி ரேவதி (வயது 30). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாராயம் விற்றபோது திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதைத் தொடர்ந்து ரேவதியை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் ரேவதி குண்டர் சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News