செய்திகள்
தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்
தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காத்திருப்பு பட்டியலில் இருந்த ராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமார் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காத்திருப்பு பட்டியலில் இருந்த ராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமார் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். காவல்துறையின் சமூக வலைதளங்களை நிர்வகிக்கும் பிரிவு எஸ்.பி.யாக வருண்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரத்தில் கொலை வழக்கு ஒன்றில் சர்ச்சை எழுந்ததால் காத்திருப்பு பட்டியலில் வருண்குமார் இருந்த நிலையில் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை காவல்துறையின் உளவுத்துறை துணை ஆணையர்கள் திருநாவுக்கரசு, சுதாகர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையின் சட்டம் ஒழுங்கு உதவி ஐ.ஜி.ஆக திருநாவுக்கரசு நியமிக்கப்பட்டுள்ளார். உயர்நீதிமன்ற வழக்குகளை கண்காணிக்கும் பிரிவின் உதவி ஐ.ஜி.யாக சுதாகர் மாற்றப்பட்டுள்ளார்.
தலைமையிட துணை ஆணையராக இருந்த விமலா, சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கோட்டம் ரெயில்வே எஸ்.பி.யாக தர்மபுரி மாவட்ட எஸ்.பி. ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்ட எஸ்.பி.யாக பர்வேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காத்திருப்பு பட்டியலில் இருந்த ராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமார் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். காவல்துறையின் சமூக வலைதளங்களை நிர்வகிக்கும் பிரிவு எஸ்.பி.யாக வருண்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரத்தில் கொலை வழக்கு ஒன்றில் சர்ச்சை எழுந்ததால் காத்திருப்பு பட்டியலில் வருண்குமார் இருந்த நிலையில் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை காவல்துறையின் உளவுத்துறை துணை ஆணையர்கள் திருநாவுக்கரசு, சுதாகர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையின் சட்டம் ஒழுங்கு உதவி ஐ.ஜி.ஆக திருநாவுக்கரசு நியமிக்கப்பட்டுள்ளார். உயர்நீதிமன்ற வழக்குகளை கண்காணிக்கும் பிரிவின் உதவி ஐ.ஜி.யாக சுதாகர் மாற்றப்பட்டுள்ளார்.
தலைமையிட துணை ஆணையராக இருந்த விமலா, சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கோட்டம் ரெயில்வே எஸ்.பி.யாக தர்மபுரி மாவட்ட எஸ்.பி. ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்ட எஸ்.பி.யாக பர்வேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.