செய்திகள்
நகை பறிப்பு

வாங்கல் அருகே பெண்ணிடம் 5½ பவுன் நகை பறிப்பு

Published On 2020-09-05 08:54 GMT   |   Update On 2020-09-05 08:54 GMT
வாங்கல் அருகே பெண்ணிடம் 5½ பவுன் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்:

கரூர் மாவட்டம், வாங்கல் அடுத்துள்ள குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் அன்னம்மாள் (வயது 45). இவர், நேற்று முன்தினம் மதியம், இதே பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் மாட்டுக்கு தேவையான புற்களை அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், அன்னம்மாளின் கழுத்தில் கிடந்த 5½ பவுன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பியோட முயன்றார். அப்போது அன்னம்மாள் கூச்சலிட்டதால், அருகில் உள்ளவர்கள் ஒடிவந்த போது, தாலிச் செயினை பறித்த நபர், மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து அன்னம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில் வாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை பறித்து சென்ற நபரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News