செய்திகள்
வாலாஜா அருகே மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:
வாலாஜா டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் உதயசூரியன் மற்றும் போலீசார் சென்னை-பெங்களூரு மெயின் ரோட்டில் உள்ள அரசினர் பள்ளி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மூட்டைகளுடன் வந்தவரை நிறுத்தி விசாரணை நடத்தியதில், ராணிப்பேட்டையை அடுத்த சீனிவாசன்பேட்டையை சேர்ந்த தாமு என்கிற தாமோதிரன் (வயது 35) என்பதும், வன்னிவேடு பாலாற்றில் இருந்து மணலை மூட்டைகளாக கட்டி மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாமுவை கைது செய்தனர்.