செய்திகள்
எம்பி வசந்தகுமார்

எச்.வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று இல்லை- நேற்று எடுத்த பரிசோதனை முடிவில் தகவல்

Published On 2020-08-29 01:58 GMT   |   Update On 2020-08-29 01:58 GMT
உயிரிழந்த எச்.வசந்தகுமார் எம்.பி.க்கு கொரோனா தொற்று இல்லை என்று நேற்று காலை எடுத்த பரிசோதனை முடிவில் தெரிய வந்தது.
சென்னை:

காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார் அறிகுறியற்ற கொரோனா பாதிப்புடன் கடந்த 10-ந் தேதி அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவரது உடலில் கொரோனா தொற்று இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து அவ்வப்போது பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை 10.44 மணிக்கு அவருடைய சளி மாதிரியை எடுத்து மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில், எச்.வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று இல்லை (நெகட்டிவ்) என்று முடிவு வந்தது. எனினும் ஏற்கனவே அவரது உடலில் கொரோனா தொற்று ஏற்படுத்திய தாக்கத்தால் நுரையீரலில் சளி தொந்தரவு ஏற்பட்டு, நிமோனியா தொற்று தீவிரமாக உருவெடுத்தது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News