செய்திகள்
கோப்புபடம்

கோவையில் 10-ம் வகுப்பு மாணவி உள்பட 5 பேர் மாயம்

Published On 2020-08-28 15:40 GMT   |   Update On 2020-08-28 15:40 GMT
கோவையில் 10-ம் வகுப்பு மாணவி உள்பட 5 பேர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

பொள்ளாச்சி ஆனை மலையை சேர்ந்தவர் ஜோதி. இவரது மகள் தெய்வாத் தாள் (வயது17).

இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று இயற்கை உபாதை கழிக்க சென்ற அவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

ஆனைமலையை சேர்ந்தவர் மகேஷ்வரன். இவரது மகள் சுசீலா(18). இவர் 12-ம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று திடீரென மாயமானார். அவரை பெற்றோர் அக்கம்பக்கம் தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இதுகுறித்து கோட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மகள் தேவிகா(18). 10-ம் வகுப்பு மாணவி. சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியில் சென்ற மாணவி அதன்பின்னர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர். சுந்தராபுரத்தை சேர்ந்தவர் பாண்டு. இவரது மனைவி மஞ்சுளா(23). கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனவேதனை அடைந்த மஞ்சுளா சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியில் சென்றார். ஆனால் அதன்பின்னர் திரும்பி வரவில்லை.கோவை, பி.என்.பாளையம் பொன்னி நகரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் மோகனஸ்ரீ(17). இவர் கடந்த 19-ந் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றார்.

அதன்பின்னர் அவர் திரும்பி வரவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ரேஸ் கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News