செய்திகள்
அரவக்குறிச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரவக்குறிச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியக் குழு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரவக்குறிச்சி:
இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். இன்னும் 6 மாதகாலத்திற்கு ரேசன் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரவக்குறிச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியக் குழு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் ராஜாமுகமது தலைமை தாங்கினார். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.