செய்திகள்
கோப்புபடம்

திருமண ஆசைகாட்டி பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

Published On 2020-08-27 08:07 GMT   |   Update On 2020-08-27 08:07 GMT
கோவையில் திருமண ஆசை காட்டி பள்ளி மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கோவை:

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள மொண்டியை சேர்ந்தவர் மல்லன். இவரது மகன் சோலைராஜ் (வயது 23). ஐ.டி.ஐ. பட்டதாரியான இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வேலை தேடி கோவைக்கு வந்தார்.

பின்னர் ராமநாதபுரம் பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 15 வயது 10-ம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் மாணவி பள்ளிக்கு செல்லும் போது அவரை சோலைராஜ் அடிக்கடி சந்தித்து வந்தார். அப்போது அவர் மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென மாணவி மாயமாகி விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்து அவரது பெற்றோர் இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியை சோலைராஜ் திருமண ஆசை காட்டி தனது சொந்த ஊருக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் தர்மபுரிக்கு விரைந்து சென்று மாணவியை மீட்டனர்.

பின்னர் பள்ளி மாணவியை திருமண ஆசை காட்டி கடத்தி சென்ற சோலைராஜை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News