செய்திகள்
சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி

ஓணம் பண்டிகை: சென்னைக்கு 31ந்தேதி உள்ளூர் விடுமுறை

Published On 2020-08-27 07:32 GMT   |   Update On 2020-08-27 07:32 GMT
ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 31-ந்தேதி சென்னை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.
சென்னை:

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத் திருநாள் அன்று மகாபலி சக்கரவர்த்தி தன்னுடைய நாட்டையும், நாட்டு மக்களையும் பார்ப்பதற்காக வருகிறார். அவரை வரவேற்கும் விதமாகவே கேரள மக்கள் 10 நாட்கள் திருவிழாவாக ஓணம் பண்டிகையை நடத்துகின்றனர்.

“காணம் விற்றேனும் ஓணம் கொண்டாடு” என்பது பழமொழி. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை போல பாரம்பரியமான ஓணம் பண்டிகை கேரள மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சாதி, மத பேதமின்றி கொண்டாடப்படும் இந்தப்பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 31-ந்தேதி சென்னை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.

ஓணம் பண்டிகை உள்ளூர் விடுமுறைக்கு பதில் செப்டம்பர் 12ந்தேதி அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News