செய்திகள்
தஞ்சையில் ஸ்கூட்டர் மீது கார் மோதல்- மாணவி பலி
தஞ்சையில் ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் மாணவி பலியானார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை ஞானம்நகர் அனீஷ் பாத்திமா நகரை சேர்ந்தவர் கண்ணன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி புஷ்பா. இவர்களது மகள் பிரியதர்ஷினி(வயது18). இவர் பிளஸ்-2 முடித்துள்ளார். இவர் தனது தாயுடன் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு மாரியம்மன்கோவில் பைபாஸ் சாலையோரம் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றார். அங்கு பணத்தை எடுத்து கொண்டு ஸ்கூட்டரில் இருவரும் புறப்பட்டனர். அப்போது தஞ்சை-நாகை சாலையை ஸ்கூட்டரில் கடந்து செல்ல முயன்றபோது மேம்பாலத்தில் இருந்து மாரியம்மன்கோவில் நோக்கி சென்ற கார் ஒன்று ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தாயும், மகளும் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே பிரியதர்ஷினி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த புஷ்பா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சிறப்பு விமானங்களை தவிர பிற விமானங்கள் எல்லாம் இயக்கப்படவில்லை. இந்தநிலையில் மகளின் இறப்பை அறிந்த கண்ணன், வெளிநாட்டில் இருந்து தஞ்சைக்கு வந்து இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியுமா? என்பது தெரியவில்லை.
தஞ்சை ஞானம்நகர் அனீஷ் பாத்திமா நகரை சேர்ந்தவர் கண்ணன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி புஷ்பா. இவர்களது மகள் பிரியதர்ஷினி(வயது18). இவர் பிளஸ்-2 முடித்துள்ளார். இவர் தனது தாயுடன் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு மாரியம்மன்கோவில் பைபாஸ் சாலையோரம் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றார். அங்கு பணத்தை எடுத்து கொண்டு ஸ்கூட்டரில் இருவரும் புறப்பட்டனர். அப்போது தஞ்சை-நாகை சாலையை ஸ்கூட்டரில் கடந்து செல்ல முயன்றபோது மேம்பாலத்தில் இருந்து மாரியம்மன்கோவில் நோக்கி சென்ற கார் ஒன்று ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தாயும், மகளும் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே பிரியதர்ஷினி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த புஷ்பா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சிறப்பு விமானங்களை தவிர பிற விமானங்கள் எல்லாம் இயக்கப்படவில்லை. இந்தநிலையில் மகளின் இறப்பை அறிந்த கண்ணன், வெளிநாட்டில் இருந்து தஞ்சைக்கு வந்து இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியுமா? என்பது தெரியவில்லை.