செய்திகள்
விபத்து

செஞ்சி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- 2 பேர் பலி

Published On 2020-08-15 08:03 GMT   |   Update On 2020-08-15 08:03 GMT
செஞ்சி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
செஞ்சி:

செஞ்சி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் கவுஸ்பாஷா (வயது 57). இவரது மனைவி வகிதாபாணு(50). இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இதேபோல் செஞ்சி அடுத்த அங்கராயநல்லூரை சேர்ந்த வெள்ளை மகன் பிச்சை(37) என்பவர் தனது மனைவி லட்சுமி(30), மகள் கவிப்பிரியா(12) ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் விழுப்புரத்தில் இருந்து சொந்த ஊர் நோக்கி வந்து கொண்டிருந்தார். இவர்கள் செஞ்சி கடகம்பூண்டி கூட்டு ரோடு அருகே வந்த போது, 2 பேரின் மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பிச்சை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 4 பேரும் சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் கவுஸ்பாஷாவின் நிலை மோசமானதால் அவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயமடைந்த லட்சுமி, கவிப்பிரியா, கவுஸ்பாஷா மனைவி வகிதா பாணு ஆகியோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து அனந்தபுரம் போலீசார் விசாரித்த வருகின்றனர்.
Tags:    

Similar News